இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 ஜூலை, 2009

புளூடூத் பயன்பாடும் பாதுகாப்பும்







ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN 0r piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:

அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.




வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.


ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.


பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன.

உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:

எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.

உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

CAD கற்றுக்கொள்வோம் - பாடம் -1




ந்த ஒரு வரைபடத்தை எடுத்துக் கொண்டாலும் அது Line, Point மற்றும் Arc களினால் மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம். எனவே, ஒரு வரைபடத்தை எளிதாக வரையறுக்க வேண்டுமெனில் 'Lines & Arcs' என வைத்துக் கொள்ளலாம். இவற்றை மாறுபட்ட இடங்களில், மாறுபட்ட கோணங்களில் அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான வரைபடத்தை உருவாக்க, எனக்குத் தெரிந்த முறையில் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு சிறு முயற்சிதான் இந்த பதிவு. (வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடரும்!)

ஒரு Line ஐ வரைய வேண்டுமெனில் நமக்கு அதன் துவக்கப் புள்ளியும், இறுதிப்புள்ளியும் தெரிந்திருக்க வேண்டும். (ஒரு Line இன் Start point மற்றும் End Point தெரிந்தால், நமக்கு அதன் கோணமோ(Angle), அளவோ தெரிய வேண்டியதில்லை). இதனை Co-ordinates என வைத்துக் கொள்வோம். AutoCAD ஐ பொறுத்தமட்டில் ஒரு வரைபடத்தில் குறிப்பிட்ட object -இன் இருப்பிடம் x,y Co-ordinates இனால் நிர்ணயிக்கப்படுகிறது. இது AutoCAD-ல் World Co-ordinate System (WCS) என வரையறுக்கப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொண்டால் CAD மிக எளிதாகிவிடும்.

முதல் இரு பதிவுகளில் CAD -இன் அடிப்படை பாடங்களை பார்க்கப்போவதால், சிறிது போரடித்தாலும், மனதில் பதிந்து கொள்ளுங்கள்.

AutoCAD-ல் குறிப்பிடும்படி மூன்று Co-ordinate System-கள் உள்ளன.

முதலாவது,

Absolute Co-ordinate system:- (Syntax: x,y)

இந்த முறை வரைபடத்தாளில் (Graph Sheet) x,y புள்ளிகளைக் குறித்துக்கொண்டு பின் அந்த புள்ளிகளை இணைக்கும் வகையில் கோடு வரைவது போல் ஆகும்.

கீழே உள்ள படத்தை பாருங்கள், இது 60 x 40 அளவு கொண்ட ஒரு செவ்வகமாகும்.





Absolute Co-ordinate system ஐ உபயோகித்து A,B,C மற்றும் D Co-ordinates ஐ தெரிந்து கொள்வது எப்படி? கீழேயுள்ள படத்தை கவனியுங்கள்.


இதில் A என்ற புள்ளி X அச்சில் 0 விலும் Y அச்சில் 0 விலும் உள்ளது, அதாவது A(0,0) [0,0 என்பது Origin], B என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளது, அதாவது B(60,0). C என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் C(60,40). D என்ற புள்ளி X அச்சில் 0 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் D(0,40) ஆகும்.

அதாவது முதலில் சொன்ன 60 x 40 செவ்வகத்தை வரைய நமக்கு தேவைப்படும் புள்ளிகள்.

A(0,0)
B(60,0)
C(60,40)
D(0,40)

இப்பொழுது கீழே உள்ள படத்திற்கு நீங்களாகவே Co-ordinates (A,B,C,D,E,F,G & H) ஐ கண்டுபிடியுங்கள்.

இதன் விடையை பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள். உங்கள் விடை சரிதானா? என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.

வியாழன், 9 ஜூலை, 2009

வயர்லெஸ் தொழில் நுட்பத்தின் 125 ஆண்டுகள்

இன்று மனித வாழ்க்கையில் வயர்லெஸ் தொழில் நுட்பம் இல்லாத இடமே இல்லை எனலாம். நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைல் போன், ரேடியோ, ரிமோட் என எத்தனையோ சாதனங்களைப் பட்டியலிடலாம்.

முதலில் வயர்லெஸ் தொழில் நுட்பம் என்றால் அது எதனைக் குறிக்கிறது? சாதாரண மனிதனின் நோக்கில் இதனைக் கூற வேண்டும் என்றால் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தொலைவின் இடையே தகவல்களை எந்தவித வயர் இணைப்பு மின்றி கடத்துவதே ஆகும்.


வயர்லெஸ் தொழில் நுட்பத்தின் இன்றைய நிலை அதன் 125 ஆண்டுகால வளர்ச்சியின் முதிர்ச்சி ஆகும். இன்னும் தொடர்ந்து பல முனைகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இதன் வளர்ச்சியை அதன் தொடக்கம் முதல் காணலாம்.


1887: முதன் முதலில் வயர்லெஸ் தொழில் நுட்பம் என்றால் என்ன என்பது குறித்து ஜெர்மானிய நாட்டு விஞ்ஞானி ஹெர்ஸ் என்பவர் எடுத்துரைத்தார். அவர் எவ்வாறு மின் காந்த அலைகளை வயர் எதுவுமின்றி ஒரு வெளியில் அனுப்பலாம் என்று காட்டினார். இது மைக்கேல் பாரடே அறிவித்த ஒளி குறித்த கோட்பாட்டின் விரிவாக்கம் ஆக இருந்தது. ஆனால் ஹெர்ட்ஸ் அதற்கு மேல் எதுவும் செய்திடவில்லை.


1893: நிக்கோலா டெல்ஸா என்பவர் ரேடியோ அலைகளை அனுப்பிக் காட்டினார்.


1897: மார்கோனி ரேடியோ அலைகளை அனுப்ப முடியும் என்று வரையறை செய்து அதற்கான கண்டுபிடிப்பு உரிமையினைப் பெற்றார்.


1898: டெல்ஸா ஒரு ரிமோட் கண்ட்ரோல் மூலம் படகு ஒன்றை இயக்க முடியும் என்பதைக் காட்டினார். இந்த சோதனை ஓட்டத்தைப் பார்த்தவர்கள் டெல்ஸா தன் மனதின் சக்தியால் தான் படகை இயக்குவதாக எண்ணினார்கள்.


1906: இன்று ஏ.எம். ரேடியோ என்று (Amplitude Modulation) அழைக்கப்படும் அலைவரிசை ஒலி பரப்பினை ரெஜினால்ட் என்பவர் காட்டினார்.

1915: வெர்ஜினியாவிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு ஏ.டி. அண்ட் டி நிறுவனம் ரேடியோ அலைகளை அனுப்பிக் காட்டியது.


1919: ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ரேடியோ கார்ப்பரேஷன் ஆப் அமெரிக்காவினை நிறுவியது.


1921: Shortwave (SW) radio இயக்கிக் காட்டப்பட்டது.

1931: மிகத் தெளிவாக ரேடியோ அலைகளை அனுப்ப எப்.எம். (Frequency Modulation)தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.

1982: செல்லுலார் சிஸ்டத்திற்கான டிஜிட்டல் சிஸ்டத்தை அமைக்க GSM (Groupe Special Mobile) உருவாக்கப்பட்டது.

1987: ஜி.எஸ்.எம். தொழில் நுட்ப விபரங்கள் வரையறை செய்யப்பட்டன.


1990: டிஜிட்டல் ரேடியோ (எல் பேண்ட் ரேடியோ) முதன் முதலாக இயக்கிக் காட்டப்பட்டது.


1991: பின்லாந்தில் முதன் முதலாக ஜி.எஸ்.எம். வகை தொழில் நுட்பத்தில் முதல் போன் அழைப்பு ஏற்படுத்தப்பட்டது.


1992: ஐரோப்பாவிற்கு வெளியே முதல் முதலாக ஆஸ்திரேலியாவில் ஜி.எஸ்.எம். நெட்வொர்க் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 53% ஆஸ்திரேலியர்கள் ஜி.எஸ்.எம். தொலை தொடர்பு சேவையினைப் பெற்றார்கள்.


1997: வை–பி (WiFi) தொலை நுட்பம் உருவாக்கப்பட்டது.

1998: புளுடூத் தொழில் நுட்ப குழு உருவாக்கப்பட்டது.


1999: புளுடூத் 1.0 தொழில் நுட்பம் வெளியிடப்பட்டது.


2000: வர்த்தக ரீதியாக முதல் புளுடூத் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.


2002: யு.எம்.டி.எஸ். (UMTS) அமைக்கப்பட்டு மொபைல் டிவி மற்றும் வீடியோ காலிங் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2003: EDGE தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.

2004: வைமாக்ஸ் தரம் உயர்த்தப்பட்டது. புளுடூத் பதிப்பு 2.0 வெளியிடப்பட்டது.


2009: வை–பி தொழில் நுட்பத்தில் புதிய தரக்கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டன. இவை வரும் நவம்பரில் உரிமம் பெற்று அனுமதிக்கப்படும்.


thanks to dinamalar

ஒபெரடிங் சிஸ்டம் பிரோம் google

கூகிள் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது .அடுத்த ஆண்டு நடுவில் கூகிள் (Chrome OS) ஆபரேடிங் சிஸ்டம் வெளியிடுகிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.ஓபன் சோர்ஸ் முறையில் அந்த (os) இயங்கும் என்று அறிவிக்க பட்டுள்ளது.மேலும் இந்த புதிய (os)லைட் வெயிட் ஆகா இருக்கும் லினக்ஸ் கெர்னலை அடிபடையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதிய ப்ராஜெக்ட் கூகிள் (android) லிருந்து வித்யாசபடும் என்றும் அறிவித்துள்ளது .

புதிய இயங்குதளம் மூலம் இணையம் தொடர்பான சேவைகளை உடனடியாக பெறமுடியும் என்றும் .மேலும் வைரஸ் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கும் வகையில் இந்த இயங்கு தளம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இயங்குதளத்தின் முக்கிய குறிக்கோள் வேகம்,பாதுகாப்பு,எளிமை. அதாவது இந்த புதிய (os) இயக்குவதற்கு வேகமாகவும் ,வைரஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாவும் ,பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும் இருக்கும்.இந்த இயங்கு தளம் இணையத்தை அடிபடையாக கொண்டு இயங்கும் என்றும் அதனால் ஏற்கனவே உள்ள இணையம் தொடர்பான (web based applications)மென் பொருட்கள் எந்த மாற்றமும் செய்யாமல் இதில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடுவில் (netbooks)இக்கு கூகிள் கிரோம் (0s)வெளியிடப்படும் பின்பு ஆல்பா பதிப்பு வெளியிட்டு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கொள்ள படும் என்று கூறியுள்ளது .

கூகுளின் இந்த அதிரடி அறிவிப்பால் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் கூகுளுக்கும் கடும் போட்டி நிலவும்.கூகுளின் சவாலை மைக்ரோசாப்ட் சமாளிக்குமா ? என்பதை பொறுத்து இருந்து பார்போம் .

மேலும் தகவல்களுக்கு கூகுளின் ப்ளாக் சென்று பார்க்கவும்.
-http://googleblog.blogspot.com/2009/07/introducing-google-chrome-os.html