இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 பிப்ரவரி, 2009

சார்ல்ஸ் டார்வின் : 200

ஈடு இணையற்ற அறிவியலாளரான சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் பிறந்து இருநூறு வருடங்களாகின்றன. நாமறிந்த அறிவியலாளர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் டார்வின். பொதுப்புத்தியையும் புகட்டப்பட்ட (மதம் சார்ந்த) அறிவையையும் கடந்து சிந்தித்தவர் டார்வின். இன்று தொடங்கி, வரும் நாட்களில் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடவும், அந்த மாமேதைக்கு புகழஞ்சலி செலுத்து முகமாகவும் அறிவியல் இணையதளத்தில் தொடர்ச்சியாக பரிணாமம், மரபியல் போன்றவை குறித்த கட்டுரைகளையும் தகவல்களையும் இயன்ற அளவுக்குத் தர முயற்சிப்போம்.

darwin_stampsசார்ல்ஸ் டார்வின் இங்கிலாந்திலுள்ள ஸ்ரிவ்ஸ்பரி (Sherwsbury) என்ற ஊரில் 10 பெப்ருவரி 1809 அன்று பிறந்தார். அவர் குடும்பத்தினர் பரம்பரைப் பணக்காரர்கள்; தாய்வழியில் இன்றளவும் புகழ்பெற்ற வெட்ஜ்வுட் என்ற சீன முறை பீங்கான் பாத்திரங்களையும் கலைப்பொருட்களையும் தயாரிக்கும் குடும்பம். தந்தை எராஸ்மஸ் டார்வின் அந்த நாட்களில் பிரிட்டனின் முதல்தர அறிஞர்களுள் ஒருவராக அறியப்பட்டவர். முதலில் மருத்தவம் பயில ஆசைகொண்ட டார்வின் ஸ்காட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பின்னர் கிறிஸ்தவ மதபோதகராக மாற கேம்ப்ரிட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அந்த நாட்களில் கிறிஸ்துவத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்றைத் தன் கண்டுபிடிப்புகள் தகர்க்கப் போகின்றன என்று அறிந்திருக்கமாட்டார்.

கேம்ப்ரிட்ஜில் இயற்கை வேதாந்தம் (Natural Theology) என்ற பாடத்தைப் படிக்க நேர்ந்தார். அப்பொழுது ஜான் ஹெர்ஷெல் (John Herschel) என்பவரின் புத்தகம் ஒன்றைப் படித்தார். அதில் “சுற்றிலும் இருப்பவற்றைக் கூர்ந்து நோக்குதலில் வழியே இயற்கையின் நடைமுறை விதிகளை அறிந்து கொள்வதே இயல் தத்துவத்தின் (Natural Philosophy) உச்சம்” என்ற ஹெர்ஷல் விளக்கம் டார்வினை மிகவும் ஈர்த்தது. கூடவே ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஃபன் ஹம்போல்ட் (Alexander von Humboldt) என்ற மேதையின் பயணங்களின் வழியே உலகையும் இயற்கையையும் புரிந்துகொள்ளும் உன்னதத்தைப் பற்றிய விளக்கம் சேர்ந்துகொள்ள நெடும் பயணம் ஒன்றை மேற்கொண்டு அதனூடாக இயற்கை விதிகளை ஆய்வதில் டார்வினுக்கு ஆர்வம் பெருகியது.

1831-ல் ஹெச்.எம்.எஸ் பீகிள் (HMS Beagle) என்ற கப்பலில் இங்கிலாந்தில் தொடங்கி, தென்னமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை வழியாக தென்கோடியில் இருக்கும் ஃபால்க்லண்ட் என்ற தீவிற்குச் சென்றார். அங்கிருந்து மேற்குக் கடற்கரை வழியாக தென்னமெரிக்காவின் வட மேற்கில் இருக்கும் கலாபகஸ் என்ற தீவுக்கூட்டத்தில் பல நாட்கள் தங்கினார். அங்கிருக்கும் பறவைகளையும் விலங்கினங்களையும் தாவரங்களையும் அவர் இதுவரை வேறெங்கும் கண்டதில்லை. தனித் தீவுக்கூட்டத்தில் தனிமை வாய்ந்த உயிரினங்கள் எப்படி வந்தன, அவை ஏன் அங்கே நன்றாகச் செழித்து வளர்கின்றன என்று அவருக்குத் தோன்றிய கேள்விதான் நாம் இன்றைக்கு பூமியில் உயிரிகளின் தோற்றமும் வளர்ச்சியும் மாற்றமும் குறித்த புரிதல்களுக்கு வழிகாட்டுகின்றன. தொடர்ந்து ஆஸ்திரேலியா வழியாக மீண்டும் இங்கிலாந்தை ஹெச் எம் எஸ் பீகிள் 1836 ஆம் ஆண்டு வந்தடைந்தது.

தன் கடற்பயணத்தின்போது சேகரித்த தகவல்கள், தரவுகள், பயணக்குறிப்புகள் இவற்றின் மீது கிடத்தட்ட இருபது வருடங்கள் தொடர்ச்சியான ஆய்வை மேற்கொண்டார் டார்வின். தொடர்ந்து அவர் எழுதிய On the Origin or Species by Means of Natural Selection என்ற புத்தகம் 1859-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. அதில் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ற அமைப்புகளைப் பெற்றிருக்கும் உயிரினங்கள் அவ்வாறு ஏற்பில்லாத உயிரினங்களைக் காட்டிலும் எளிதில் எப்படி ஜீவிக்க முடிகிறது என்று விளக்கினார். வலுவற்றவை தங்காமல் அழிந்துபோக வலுவுள்ளவற்றின் சந்ததி எளிதில் பெருகிறது.

சந்ததிப் பெருக்கத்தில் சற்று மாறுதல்கள் ஏற்பட்டு வேறு குணங்களைக் கொண்ட ஒரு புதிய உயிரி பிறந்தால் அது சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் பட்சத்தில் நன்கு வளர்ந்து தன் குணங்களைக் கொண்ட சந்ததியைப் பெருக்குகிறது. இதுவே தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் புதுப்புது உயிரினங்கள் தோன்ற வழிவகுக்கிறது.

டார்வினின் இந்தக் கோட்பாடு அந்த நாட்களில் (ஏன் இன்றுகூட) பலத்த சர்ச்சைக்குள்ளானது. கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆதி கடவுள் இந்த உலகை ஏழு நாட்களில் படைத்தார். ஆனால் டார்வினின் பரிணாமக் கோட்பாடுகளின்படி உயிரியலில் மேல்நிலையிலுள்ளவை அவற்றின் கீழிருக்கும் உயிரினங்களில் ஏற்பட்ட தற்செயலான மாறுதல்களால் படிப்படியாக வளர்ந்து உருவானவை. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன்.

டார்வினின் பரிணாமக் கோட்பாடு கிட்டத்தட்ட நூற்றைம்பது வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நூற்றைம்பது வருடக் கேள்விகளும் ஆய்வுகளும் அதற்கு மேலும் வலுவைத்தான் சேர்த்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் உயிரிகளில் மரபைத் தாங்கி இனப்பெருக்கத்தின்போது அதை முன்னெடுத்துச் செல்லும் டி.என்.ஏ-வின் அமைப்பும் செயற்பாடும் புரிந்துகொள்ளப்பட்டது. இப்பொழுது உயர்நுட்ப மரபியல் ஆய்வுகளின் வழியே மூலக்கூறு அளவில் துல்லியமாகப் பரிணாமம் எப்படி செயற்படுகிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது. குரங்குக்கும் மனிதனுக்கும் ஒற்றைக் குரோமோசோமின் இழைவழியே இருக்கும் மாறுபாட்டைக் கடந்த சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்திருகிறார்கள்.

டார்வின் வாழ்ந்த காலத்தில் மரபணுக்களைப் பற்றிய அறிவு கிடையாது, டி.என்.ஏ, குரோமோசோம் இவற்றைப் பற்றித் தெரியாது. இன்றைக்கு அவர் வாழ்ந்திருந்தால் தன் கண்டுபிடிப்புகள் துல்லியமான சோதனைகளில் நிரூபணமாவதைக் கண்டு மகிழ்வார் என்பது நிச்சயம். டார்வினின் அறிவியல் முறை தனித்தன்மையாது. மலையுச்சியில் நின்று கடற்கரைப் பெரும்பரப்பை அவர் கண்டார். அங்கிருந்த ஒவ்வொரு செடி, கொடி, விலங்கு, மீன், தொடங்கி அங்கே கிடைக்கும் கனிமங்கள், பெய்யும் மழையளவு, மாறும் காலநிலை, பிற நிலங்களுக்கும் அதற்கும் இருக்கும் மாறுபாடுகள் இவற்றைத் துல்லியாம ஆராய்ந்தார். அப்பொழுதும் அவரால் முழு பெருநிலப்பரப்பின் பெரும நிலையையும் தொடர்ச்சியாகக் காணமுடிந்தது.

ஒற்றை மணற் துகளில் உலகத்தைக் காணும் தனித்திறன்தான் டார்வினை இருநூறு வருடங்களுக்குப் பிறகும் நாம் கொண்டாட முக்கிய காரணம்.

கலைமாமணி 2009 TAKEN FROM IDLYVADAI

அடுத்த வருடம் விருது பெறும் கலைஞர்கள் பட்டியல் கீழே....

சிறந்த தெருக்கூத்துக் கலைஞர் - கவிஞர் கனிமொழி கருணாநிதி ( தெருக்கூத்தை நகரத்துக்கு கொண்டுவந்ததற்காக )
சிறந்த தொகுப்புரை(அரசியல்) : கயல்விழி அழகிரி
சிறந்த தொகுப்புரை(சின்னத்திரை) : சின்மையீ ( கடைசியில் புரியாமல் ’பை’ சொல்லுவதற்காக )
சிறந்த புது’பெரும்’நடிகை : நமிதா
சிறந்த பழம்’பெரும்’ திரைப்பட நடிகை: - ஷகிலா
சிறந்த நடிகர் : குறளரசன் ( சிம்புவின் தம்பி, இவரை எப்படி பாப்புலர் ஆக்குவது ? )
சிறந்த நீச்சல் திறன் கலைஞர் : கலைஞரின் டாக்டர் ( கண்ணீரில் நீந்தி வந்து ஆப்பரேஷன் செய்ததற்காக )
சிறந்த குழந்தை நட்சத்திரம் - யாத்ரா ( இவர் மட்டும் தான் பாக்கி )
சிறந்த (ஏடாகூட பேச்சுத்திறன்) இயக்குனர் : சீமான்
சிறந்த குதலைக் கவிஞர் - ஹரன் பிரசன்னா ( ’வேண்டாம்’ என்று 575758 க்கு SMS அனுப்பினால் கவிதை வரும் )
சிறந்த டப்பிங் கலைஞர் - கீ.வீரமணி ( முரசொலியில் வருவதை விடுதலையில் டப் செய்வதற்காக )
சிறந்த ஜால்ரா கலைஞர்கள் - தமிழ் படத்துக்கு வசனம் எழுதும் தமிழ் எழுத்தாளர்கள்.
சிறந்த திரைப்பட வசனகர்த்தா - சாரு நிவேதிதா ( ஏன் தமிழ் படத்துக்கு எழுதுவதில்லை என்று சொந்த வசனம் எழுதுவதால் )
சிறந்த ’புகைப்படக் கலைஞர்- தயாநிதி மாறன் ( எல்லா புகைப்படத்திலும் கலைஞர் பக்கத்தில் இருப்பதால் )
சிறந்த சினிமா பி.ஆர்.ஓ - ஜெயமோகன் ( படத்தை விட கேள்வி பதிலில் அதிகம் படம் காட்டுவதற்கு )

பொற்கிழி பெறுவோர் பட்டியல்
சிறந்த கலை குழு - மானாட மையிலாட குழுவினர் ( கலா இருக்கும் குழு கலைக்குழு )
சிறந்த நாடகக் குழு - வைகோ, ராமதாஸ், திருமா.

மேலும் சிபாரிசுகள் இருந்தால் வாசகர்கள் ’தாராளமாக’ சொல்லலாம். சிறந்த சிபாரிசுக்கு பரிசு உண்டு :-)

IF U WANT TO GIVE RECOMMENDATION PLEASE VISIT THE FOLLOWING BLOG

www.idlyvadai.blogspot.com


செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

மின்னல் - மின் அஞ்சல் ...

உலகிலேயே மிகப்பெரிய கட்டிடம் ...

துபாயில் .... மேலும் விபரங்கள்

Dubai1 Dubai

இரவு நேரத்தில் மின்னல் இறங்கிய(க்) காட்சி ...

Dubai2 Dubai4
Dubai5 Dubai6

பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறதல்லவா.

உடனே நாம் அறிந்தவர்களுக்கு இதனை மின்மடலில் அனுப்பவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

தவறில்லை, ஆனால் ...

நாம் நமது ‘contacts' listல் உள்ள அனைவர்களுக்கு அனுப்புவோம் ...

இங்கே நாம் கவணிக்க தவறும் விடயம்.

எல்லா மின் அஞ்சல் முகவரிகளையும் 'TO' என்ற இடத்தில் நிரப்பி அனுப்பிவிடுவோம், நம்மை அறிந்த எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகதவர்களாக இருப்பார்கள்.

நமது நட்பில் இருக்கும் ஒருவரின் மின் அஞ்சல் முகவரி அவர் அறியாத ஒருவரிடம் சென்று சேர்ந்துவிடும்.

அவரும் அப்படியே - அவரின் ‘contacts'க்கு 'forward' செய்துவிடுவார் ... இப்படியாக நமது மின் அஞ்சல் முகவரிகள் அறியாதவர்கள் பார்வைக்கு சென்று விடும்.

இதனால் ஏற்படம் தொல்லைகளோ ... சொல்லி மாளாது.

இதற்கு ஒரு தீர்வு உண்டு நீங்கள் பலருக்கு மின் அஞ்சல் அனுப்பவதாயிருந்தால்

'TO' என்ற இடத்தில் தங்கள் மின் அஞ்சல் முகவிரியையே இடுங்கள்

'BCC' (Blind Carbon Copy) என்ற இடத்தில் மற்ற அனைவரின் மின் அஞ்சல் முகவரியை இடுங்கள்,

இவ்வாறு செய்வதனால் அறியாதவர்களின் பார்வைக்கு மற்றவரின் மின்அஞ்சல் முகவரி போகாது.

அப்புறமென்ன ‘forward' செய்ய வேண்டியது தானே ...

ஐந்து SMSக்கு கிலோ அரிசி

நீங்கள் இந்தியாவில் இருக்கீங்களா? உங்கள் மொபைல்போனுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு SMS விளம்பரத்துக்கும் 20 காசு கொடுக்கின்றார்களாம் mginger-காரர்கள்.முயன்றுபாருங்கள் நான் கியாரண்டியில்லை. சும்மாவா 5 விளம்பரம் வந்தால் ஒரு கிலோ அரிசி வாங்கலாமே.

புச்சு மாமே புச்சு ...

தங்கள் பதிவுகளை சேமித்திருப்பீர்கள் ...

அதனை எப்படி மறு பிரசுரம் செய்வது என அறிவோம் ...

புது ப்லாக்-கர் கணக்கு திறந்து விடுங்கள்.

வலைப்பூவின் பெயரும் தங்கள் மின் அஞ்சல் முகவரியும் ஒன்றாக இருத்தல் ஹேக்கர்களுக்கு மிக எளிதாக அமைந்து விடும்.

இது போல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Blog2

’Import blog'-கை கிளிக்குங்கள் ...

Blog3

’Browse' என்பதை கிளிக்குங்கள்

ஏற்கனவே சேமிப்பில் உள்ள ‘XML' கோப்பினை தேர்வு செய்யுங்கள்.

'IMPORT BLOG' என்பதை கிளிக்குங்கள்


Blog6

எல்லா பதிவுகளையும் ஒரே தடவையில் பதிந்துவிடலாம், அல்லது சிலவற்றை தவிர்த்துவிட்டும் பதியலாம்.

மேலே உள்ள படங்களில் விளக்கம் போதவில்லையென்றால் பின்னூட்டங்களில் உரையாடுவோம்.

உதாரணமாக இங்கே நான் ஒரே ஒரு பதிவினை புது வலைப்பூவில் பதிந்துள்ளேன்

பாருங்கள்

ப்லாக்கர்-லிருந்து வேர்ட்பிரஸ்-க்கும் மாறலாம் - இதனைப்பாருங்கள்.

இதில் விருப்பம்மிருந்தால் சொல்லுங்கள் அதனையும் பதிவிடுகிறேன்.

சனி, 21 பிப்ரவரி, 2009

A chronological list of Chief Ministers of Tamilnadu since 1920

  • Thiru A Subbarayalu : 17-12-1920 to 11-07-1921
  • Thiru Panagal Raja : 11-07-1921 to 03-12-1926
  • Thiru Dr. P Subbarayan : 04-12-1926 to 27-10-1930
  • Thiru P Munuswamy Naidu : 27-10-1930 to 04-11-1932
  • Thiru Ramakrishna Ranga Rao, Raja of Bobbili : 05-11-1932 to 04-04-1936
  • Thiru P T Rajan : 04-04-1936 to 24-08-1936
  • Thiru Ramakrishna Ranga Rao, Raja of Bobbili : 24-08-1936 to 01-04-1937
  • Thiru Kurma Venkata Reddy Naidu : 01-04-1937 to 14-07-1937
  • Thiru C Rajagopalachari : 14-07-1937 to 29-10-1939
  • Thiru Tanguturi Prakasam : 30-04-1946 to 23-03-1947
  • Thiru O P Ramaswamy Reddiyar : 23-03-1947 to 06-04-1949
  • Thiru P S Kumaraswamy Raja : 06-04-1949 to 09-04-1952
  • Thiru C Rajagopalachari : 10-04-1952 to 13-04-1954
  • Thiru K Kamaraj : 13-04-1954 to 02-10-1963
  • Thiru M Bakthavatsalam : 02-10-1963 to 06-03-1967
  • Dr. C.N. Annadurai : 06-03-1967 to 03-02-1969
  • Kalaignar M Karunanidhi : 10-02-1969 to 04-01-1971; 15-03-1971 to 31-01-1976
  • Dr. M G Ramachandran : 30-06-1977 to 17-02-1980 ; 09-06-1980 to 15-11-1984; 10-02-1985 to 24-12-1987
  • Thirumathi Janaki Ramachandran : 07-01-1988 to 30-01-1988
  • Kalaignar M Karunanidhi : 27-01-1989 to 30-01-1991
  • Dr. Selvi J Jayalalithaa : 24-06-1991 to 12-05-1996
  • Kalaignar M Karunanidhi : 13-05-1996 to 13-05-2001
  • Dr. Selvi J Jayalalitha : 14-05-2001 to 21-09-2001
  • Thiru O. Panneerselvam : 21-09-2001 to 01-03-2002
  • Dr. Selvi J Jayalalithaa : 02-03-2002 to 12-05-2006
  • Kalaignar M. Karunanidhi : 13-05-2006 onwards

கோகோ பாழ்ம் தீவு :

















வியாழன், 19 பிப்ரவரி, 2009

உண்மை பேசிக் ( real basic )

மைக்ரோசாப்டின் விண்டோஸ், ஆப்பிளின் மேகிண்டாஷ், இலவச லினக்ஸ் என முப்பெரும் கணிணிநடை பாதைகள் இருந்தாலும் சீக்கிரமே ஒன்று மட்டுமே நிலைத்திருக்கும் காலம் வந்துவிடும் போலிருக்கின்றது. குறைந்த விலையில் ($199) வெளியாகும் நெட்புக்குகள், அதிவேக இணைய இணைப்புகள், அதனால் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் மேக கம்ப்யூட்டிங் (Cloud computing) முறைமை மைக்ரோசாப்டின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. கூகிள் கொண்டு வரவிருக்கும்(?) ஜிடிரைவ் இன்னொரு கண்டம். அது வந்துவிட்டால் External ஹார்ட் டிரைவுகள், CD, DVD மற்றும் USB Flash டிரைவுகளின் மார்க்கெட் படுத்து விடலாம். எல்லா கோப்புகளையுமே நாம் இணைய ஜிடிரைவ் மையத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாமே.பிறகு எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை எடுத்துக் கொள்ளலாமே.

கணிணி உதவியின்றி நேரடி இண்டர்நெட் இணைப்பு வசதியோடு வரும் இன்றைய HDTV-யில் இரட்டைசொடுக்கி உங்கள் ஜிடிரைவில் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் மூவியை பார்க்கலாம்.அதிவேக இணைய இணைப்பால் இன்றைக்கு இது எல்லாமே சாத்தியம்.

சாமானியர்களுக்கு இத்தனை சக்திகொண்ட வன்பொருள்களும் மென்பொருள்களும் எதற்கு? இணையம் மேயவும் சில கோப்புகளை கோர்க்கவும் சாதாரண இலவச லினக்சே போதுமானது என்பதால் பத்துவருடங்கள் முன்னோக்கிப் பார்த்தால் விண்டோஸ் மற்றும் மேகிண்டாஷின் மார்கெட்ஷேர் காணாமல் போயிருக்கலாம்.

REALbasic என்றொரு மென்பொட்டலம். புரோகிராமிங் மொழியான விசுவல் பேசிக் போன்றே இயங்குகின்றது. ஆனால் இதன் விசேசம் இதனால் உங்கள் விண்டோஸ் கணிணியில் உருவாக்கப்படும் ஒரு பயன்பாட்டை அப்படியே மேகிண்டாசிலும் லினக்சிலும் ஓட விடலாம். அதாவது இது Cross-compiler வசதியைக் கொண்டுள்ளது PureBasic-ம் இதே சக்தி கொண்டிருப்பதாக சொல்கின்றார்கள். ஒரு பிளாட்பார்மில் எழுதி பல பிளாட்பார்ம்களில் ஓடவிட இதொரு நல்ல வழி.

தேர்தல் 2009 - தென்காசி தொகுதி

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

General Election, 2004Tenkasi
PartyCandidateVotes%±%

CPIM. Appadurai348,00048.85n/a

AIADMKS. Murugesan225,82431.70-3.62

JD(U)Dr. K. Krishnasamy101,12214.19n/a

IndependentM. Vadivel Kumar14,4412.03n/a
Majority122,17617.15+17.02
Turnout712,40965.68+0.80

CPI gain from AIADMKSwing+48.85


மற்ற விவரங்கள் விரைவில்...

- தகவல் காரன்

தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்

சங்கரன்கோவில்
தென்காசி 
வாசுதேவநல்லூர்
கடையநல்லூர்
ஆலங்குளம்
அம்பாசமுத்திரம்

தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்
சங்கரன்கோவில் (தனி)
தென்காசி
வாசுதேவநல்லூர் (தனி)
கடையநல்லூர்
ராஜபாளையம்
ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி)


ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் விருதுநகர் தொகுதியில் இருந்து இத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் தொகுதியில் இருந்தும், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகள் தென்காசி தொகுதியில் இருந்தும் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் சிபிஐ வசம் இருக்கிறது, ராஜபாளையம் அதிமுக வசம் இருக்கிறது. இந்த இடங்கள் அதிமுக அனுதாபிகள் அதிகம் உள்ள இடம் என்று சொல்லலாம்.

1957-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை நடந்த 9 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் த.மா.கா. வெற்றி பெற்றது.

1998, 1999 ஆகிய 2 பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 

General Election, 2004Tenkasi
PartyCandidateVotes%±%

CPIM. Appadurai348,00048.85n/a

AIADMKS. Murugesan225,82431.70-3.62

JD(U)Dr. K. Krishnasamy101,12214.19n/a

IndependentM. Vadivel Kumar14,4412.03n/a
Majority122,17617.15+17.02
Turnout712,40965.68+0.80

CPI gain from AIADMKSwing+48.85


மற்ற விவரங்கள் விரைவில்...

- தகவல் காரன்



ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் விருதுநகர் தொகுதியில் இருந்து இத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் தொகுதியில் இருந்தும், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகள் தென்காசி தொகுதியில் இருந்தும் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் சிபிஐ வசம் இருக்கிறது, ராஜபாளையம் அதிமுக வசம் இருக்கிறது. இந்த இடங்கள் அதிமுக அனுதாபிகள் அதிகம் உள்ள இடம் என்று சொல்லலாம்.

1957-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை நடந்த 9 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் த.மா.கா. வெற்றி பெற்றது.

1998, 1999 ஆகிய 2 பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 

General Election, 2004Tenkasi
PartyCandidateVotes%±%

CPIM. Appadurai348,00048.85n/a

AIADMKS. Murugesan225,82431.70-3.62

JD(U)Dr. K. Krishnasamy101,12214.19n/a

IndependentM. Vadivel Kumar14,4412.03n/a
Majority122,17617.15+17.02
Turnout712,40965.68+0.80

CPI gain from AIADMKSwing+48.85


மற்ற விவரங்கள் விரைவில்...

- தகவல் காரன்


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. நீதிமன்றங்களில் தான் சரியில்லை

சு.சாமி மீது முட்டைவீச்சு....ஐகோர்ட்டில் கலவரம்

# ஐகோர்ட் கலவர எதிரொலி:தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
# ஐகோர்ட் கலவரம்: பலத்த காயத்துடன் தப்பினார் நீதிபதி
# ஐகோர்ட் கலவரம்: பத்திரிக்கையாளரின் கார் எரிப்பு
# வழக்கறிஞர்கள் ஆவேசம்:ஐகோர்ட் வளாக போலீஸ் நிலையம் தீயிட்டு எரிப்பு
# சு.சாமி வழக்கு எதிரொலி:போலீசாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதல்:போர்க்களமான ஐகோர்ட் வளாகம்

விரிவான செய்திகள் கீழே... 

சு.சாமி மீது முட்டைவீச்சு : 2 வக்கீல்கள் கைது 

ஐகோர்ட் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஏ.சி. காதர் மொய்தீன், தன்னை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அவரின் புகாரைத் தொடர்ந்து 19 வக்கீல்கள் மீது வழக்கு தொடர்ந்தது சென்னை காவல்துறை. குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் வக்கீல் சங்க முன்னாள் செயலாளர் கினி இம்மானுவேல் உள்ளிட்ட இருவரை சென்னை போலீஸ் கைது செய்துள்ளது. 

கலைஞர் வேதனை

நீதிமன்றத்துக்கு உள்ளேயே வழக்கறிஞர்களில் சிலர் சுப்பிரமணிய சாமி போன்றவர்களிடம் நடந்து கொண்ட விதமும் (இது தொடர்பாக காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.) பொதுக் கூட்டங் களில் இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமாக சிலர் பேசியதும் முதல்வருக்கு மனச்சங்கடத்தை கொடுத்துள்ளன. - கலைஞர்

சு.சாமி ஆவேசம்

என் மீது முட்டை வீசுவதால் இலங்கையில் விடுதலைப்புலிகளை காப்பாற்றலாம் என இங்குள்ள கைக்கூலிகள் நினைப்பது பைத்தியக்காரத்தனம் - சுப்பிரமணியசாமி 


செய்தி-1: 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் ஐகோர்ட் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

செய்தி-2
சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

நேருக்கு நேர் மோதலில் வழக்கறிஞர்கள் கற்கள்,செருப்புகளை வீசினர். காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் தடியடி கவனத்தில் இருந்ததால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்

இருந்த காவல்நிலையத்தில் எந்த காவலரும் இல்லை.

இதை புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் சிலர் அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்து அடித்து நொருக்கினர். அங்கிருந்த முக்கிய ஆவனங்களை கிழித்து எரிந்தனர்.

அப்படியும் ஆத்திரம் தாங்காமல் முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர்.

பின்னர் ஓடிவந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் வெகு நேரமாய் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பத்திரிக்கையாளர் ஒருவரின் கார் எரிக்கப்பட்டது.

செய்தி-3
ஐகோர்ட் கலவரம்: பலத்த காயத்துடன் தப்பினார் நீதிபதி
மோதல் சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட வழக்கறிஞர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.

நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர் வழக்கறிஞர்கள் சிலர்.

செய்தி - 4
வழக்கறிஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை, கோவை, மதுரை பகுதிகளில் வழக்கறிஞர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வக்கீல் படிப்பில் ரவுடியிஸத்தை ஒரு பாடமாக வைக்க பரிந்துரை செய்கிறேன். 














திங்கள், 16 பிப்ரவரி, 2009

கூகிள் தரும் வசதிகள்

Google Alerts

Google Alerts are email updates of the latest relevant Google results (web, news, etc.) based on your choice of query or topic.

Some handy uses of Google Alerts include:
  • monitoring a developing news story
  • keeping current on a competitor or industry
  • getting the latest on a celebrity or event
  • keeping tabs on your favorite sports teams
Create an alert with the form on the right.

You can also click here to manage your alerts




சனி, 14 பிப்ரவரி, 2009

முக்கிய வெப்சைட்

GOOGLE LATITUDE

எங்கிருந்தாலும்

ரொம்ப நாளைக்கப்புறமாய் கூகிளிடமிருந்து சத்தமேயில்லாமல் "வாவ்" என சொல்ல வைக்கும் வசதி ஒன்று வெளியிடப் பட்டிருக்கின்றது. வேண்டாம் எனச் சொல்லியும் கேட்காமல் கார் ஷோ பார்க்கப்போகின்றேன் என கடும் பனிப்பொழிவிலும் கிளம்பிச்சென்றான் கோபால். சிக்காகோவிலிருந்து டெட்ராயிட் போக ஐந்து மணி நேரமாகும். பாதிவழியியே அவனிடமிருந்து போன் கால் வந்தது.தெரியாமல் புறப்பட்டு விட்டேன்டா ரோடு எங்கே கிடக்குனே தெரியல்லை பயங்கர ஸ்னோ என்றான். இவன் டெட்ராயிட் போய் சேர்ந்தானா இல்லையா, இப்போதைக்கு எங்கே இருக்கின்றான் என அவன் நகர்வை கண்காணித்துக் கொண்டே இருக்க கூகிள் வசதி செய்திருக்கின்றது. திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் புறப்பட்ட நண்பன் இப்போதைக்கு எங்கே இருக்கின்றான் எனவும் டிராக் செய்யலாம். எல்லாம் Google Latitude எனும் வசதிதான்.இந்த வசதியை கூகிள் மேப்பின் மீது வைத்துள்ளார்கள். இந்த வசதி மூலம் ஒரு நபரின் நகர்வை real time-ல் நீங்கள் கண்காணித்துக் கொண்டேயிருக்கலாம். என்ன அவரிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கவேண்டும்.அது Blackberry-யாகவோ Symbian S60-யாகவோ, அல்லது Windows Mobile-லாகவோ இருக்கலாம். Android மற்றும் iPhone-ல் இன்னும் சில நாட்களில் இவ்வசதி வரஉள்ளது. கூகிளின் cell tower database மற்றும் உங்கள் போனின் cell ID அல்லது GPS location detection வசதி இந்த நுட்பத்திற்காக பயன்படுத்தப்படும். யாருக்கெல்லாம் இம்மாதிரி உங்கள் இருப்பிடத்தை காட்டலாம், யாருக்கெல்லாம் இம்மாதிரி உங்கள் இருப்பிடத்தை காட்டக்கூடாதுவென பிரைவசி வசதியும் உள்ளதாக கூகிளிலிருந்து சொல்லியிருக்கின்றார்கள். பாண்டிச்சேரியில் நீங்கள் பூரித்திருக்க பொய்யாக உங்கள் தற்போதைய இருப்பிடமாக உங்கள் அலுவலகத்தையும் காட்டலாமாம். புல்லரிக்கவைக்கும் வசதி தான். ஆனால் ஏனோ பயமாயும் இருக்கின்றது.