இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 பிப்ரவரி, 2009

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. நீதிமன்றங்களில் தான் சரியில்லை

சு.சாமி மீது முட்டைவீச்சு....ஐகோர்ட்டில் கலவரம்

# ஐகோர்ட் கலவர எதிரொலி:தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
# ஐகோர்ட் கலவரம்: பலத்த காயத்துடன் தப்பினார் நீதிபதி
# ஐகோர்ட் கலவரம்: பத்திரிக்கையாளரின் கார் எரிப்பு
# வழக்கறிஞர்கள் ஆவேசம்:ஐகோர்ட் வளாக போலீஸ் நிலையம் தீயிட்டு எரிப்பு
# சு.சாமி வழக்கு எதிரொலி:போலீசாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதல்:போர்க்களமான ஐகோர்ட் வளாகம்

விரிவான செய்திகள் கீழே... 

சு.சாமி மீது முட்டைவீச்சு : 2 வக்கீல்கள் கைது 

ஐகோர்ட் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஏ.சி. காதர் மொய்தீன், தன்னை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அவரின் புகாரைத் தொடர்ந்து 19 வக்கீல்கள் மீது வழக்கு தொடர்ந்தது சென்னை காவல்துறை. குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் வக்கீல் சங்க முன்னாள் செயலாளர் கினி இம்மானுவேல் உள்ளிட்ட இருவரை சென்னை போலீஸ் கைது செய்துள்ளது. 

கலைஞர் வேதனை

நீதிமன்றத்துக்கு உள்ளேயே வழக்கறிஞர்களில் சிலர் சுப்பிரமணிய சாமி போன்றவர்களிடம் நடந்து கொண்ட விதமும் (இது தொடர்பாக காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.) பொதுக் கூட்டங் களில் இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமாக சிலர் பேசியதும் முதல்வருக்கு மனச்சங்கடத்தை கொடுத்துள்ளன. - கலைஞர்

சு.சாமி ஆவேசம்

என் மீது முட்டை வீசுவதால் இலங்கையில் விடுதலைப்புலிகளை காப்பாற்றலாம் என இங்குள்ள கைக்கூலிகள் நினைப்பது பைத்தியக்காரத்தனம் - சுப்பிரமணியசாமி 


செய்தி-1: 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் ஐகோர்ட் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

செய்தி-2
சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

நேருக்கு நேர் மோதலில் வழக்கறிஞர்கள் கற்கள்,செருப்புகளை வீசினர். காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் தடியடி கவனத்தில் இருந்ததால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்

இருந்த காவல்நிலையத்தில் எந்த காவலரும் இல்லை.

இதை புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் சிலர் அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்து அடித்து நொருக்கினர். அங்கிருந்த முக்கிய ஆவனங்களை கிழித்து எரிந்தனர்.

அப்படியும் ஆத்திரம் தாங்காமல் முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர்.

பின்னர் ஓடிவந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் வெகு நேரமாய் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பத்திரிக்கையாளர் ஒருவரின் கார் எரிக்கப்பட்டது.

செய்தி-3
ஐகோர்ட் கலவரம்: பலத்த காயத்துடன் தப்பினார் நீதிபதி
மோதல் சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட வழக்கறிஞர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.

நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர் வழக்கறிஞர்கள் சிலர்.

செய்தி - 4
வழக்கறிஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை, கோவை, மதுரை பகுதிகளில் வழக்கறிஞர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வக்கீல் படிப்பில் ரவுடியிஸத்தை ஒரு பாடமாக வைக்க பரிந்துரை செய்கிறேன். 














1 கருத்து: