இந்தியாவில் குர்குவான் காவல்துறையினர் குளோபல் பொசிசனிங் சிஸ்டத்தை முழுமையாக அனைவரும் பயன்படுத்தி போலீஸ் செயல்பாட்டை ஹை டெக் ஆக மாற்றியுள்ளனர். அடுத்ததாக கேரள அரசின் காவல்துறை தன்னுடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு 40 ஆயிரம் மொபைல் போன்களை வழங்குகிறது. இவை பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் இயங்கும். இதில் இன்டர்நெட் வசதியும் தரப்படுகிறது. இலவச அழைப்புகள் மற்றும் தள்ளுபடி கட்டண சலுகையினை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. ஒவ்வொரு போனுக்குமான மாதாந்திரக் கட்டணம் ரூ.100. பி.எஸ்.என்.எல். நெட் வொர்க்குக்குள் பேசப்படும் கால்கள் அனைத்தும் இலவசம். இந்த போன்களைப் பெறுபவர்கள் தாங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை அடைந்து ஓய்வு பெறுகையில் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இது மட்டுமின்றி 436 காவல்நிலையங்களுக்கு பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படுகிறது. இவற்றின் மூலம் மக்கள் தங்கள் கம்ப்ளைண்ட்களைப் பதிவு செய்திடலாம். இந்த முன்னுதாரத்தினை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் என எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக