இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 மார்ச், 2009

TNPSC தேர்வுகளுக்கு இலவச ஆலோசனை!

லெக்டர் வேலைக்கு படிப் பது என்பது சாதாரண மக்க ளுக்கு சாத்தியப்படாத ஒன்று என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது. கிராமப் புற, சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தற்போது தங்களது ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் சரியான வழிகாட்டுதலும், சிறந்த பயிற்சியுமே ஆகும்.

ஐ.ஏ.எஸ். படிக்க பயிற்சி மையங்களைத் தேடி டெல்லி நோக்கி ஓடிக்கொண்டிருந்த நிலை மாறிவிட்டது. தமிழகத்திலேயே தரமான பயிற்சி மையங்கள் வந்துவிட்டன. இதில், ஐ.ஏ.எஸ். தேர்வில் முட்டிமோதி வெற்றி, தோல்விகளால் நிறைய அனுபவங்களைப் பெற்றவர்கள் வழிகாட்டி களாக, பயிற்சியாளர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில், தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு புதிதாக வருபவர்களுக்கு வழிகாட்டி வெற்றிபெறச் செய்து கொண்டிருக்கிறார் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதமியின் இயக்குநர் டி.சங்கர்.

சென்னையில் 2004-ல் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதமியை தொடங்கினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்திருக்கி றார். இவரிடம் பயிற்சி பெற்றவர்களில் 5 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், 9 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவும் 20 பேர் பிற துறைகளில் உயரிய பணிகளைப் பெற்று இந்தியா முழுவதும் பணியாற்றி வருகின்றனர். 2008-ல், நடைபெற்ற முதன்மைத் தேர்வை 204 பேர் எழுதியுள்ளனர்.

இங்கு பொதுஅறிவுபாடம், புவியியல், அரசியல் அறிவியல், சமூகவியல், தமிழ், வரலாறு ஆகிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ந்த அனுபவம் பெற்றவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமானால் டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையும், உணவுப் பழக்க முறைகளும் ஒத்துக் கொள்ளாத நிலையில் நம் மாணவர்கள் பல சிரமங் களை சந்திக்க வேண்டி இருந்தது. அங்குள்ள பயிற்சி நிறுவனங்களில் கட்டணமும் மிக அதிகம். ஒரு விருப்பப் பாடத்திற்கு பயிற்சி பெற மட்டுமே ரூ.30,000-க்கு மேல் செலுத்த வேண்டும். ஒட்டு மொத்த மாக பயிற்சி முடிக்க லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டி இருந்தது. அதனால் ஐ.ஏ.எஸ். என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது.

ஆனால், தற்போது இங்கு ஒரு விருப்பப்பாடத் திற்கு ரூ.7,000 என்ற அளவில் மட்டுமே கட்டணம் உள்ளது. இதனால் அனைவரும் எளிதில் பயிற்சி பெற முடிகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதமியில் பயிற்சி அளிக்கப்படு கிறது. அண்மையில் நடைபெற்ற தேர்வில், மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 29 பேர் இங்கிருந்து தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதிப்பெண்களில் மாநில அளவில் முதலிடம் பெற்ற முத்துகுமார், இரண்டாமிடம் பெற்ற வி.ஆர். சுப்புலட்சுமி ஆகியோர் இங்கு பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, ஐ.ஏ.எஸ் நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இப்பயிற்சி நடைபெறுகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு இலவச ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறுகிறார் சங்கர்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதமி,
ஏபி-2241, இரண்டாவது தளம்,
12-வது பிரதான சாலை,
அண்ணா நகர் மேற்கு, சென்னை
போன்: 044- 64597222, 9444166435
இணையதளம்: Shankar ias academy.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக