இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 ஏப்ரல், 2009

பசுமையாக பிரிண்ட் கேட்ரிட்ஜ்

உங்களுடைய பிரிண்டரின் இங்க் கேட்ரிட்ஜ் எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும். வெகு நாட்கள் நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியே (கோடை விடுமுறை, திருமண நிகழ்ச்சி) போனால் பிரிண்டரின் கேட்ரிட்ஜ் மை உலர்ந்து அதனைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். கேட்ரிட்ஜிலிருந்து மை தொடர்ந்து செல்ல வேண்டும் என்றால் வாரந்தோறும் ஒரு பக்கமாவது அச்செடுக்க வேண்டும். இதனைத் தினந்தோறும் கூடச் செய்யலாம். போட்டோ, இமெயில் செய்தி, அனுப்பிய கடிதத்தின் காப்பி, சிறிய கணக்கு வழக்கு என ஏதாவது ஒன்றின் அச்சுக் காப்பி உங்களுக்குத் தேவயாய் இருக்கலாம். எனவே அடிக்கடி அச்செடுக்கவும்.

வெகுநாட்கள் பயன்படுத்த முடியாதபடி வெளியே செல்வதாக இருந்தால் உங்கள் பிரிண்டர் கேட்ரிட்ஜில் clean cartridges என்னும் வசதி இருக்கிறதா எனப் பார்க்கவும். அதனைப் பயன்படுத்தவும். எச்.பி. பிரிண்டராக இருந்தால் சிஸ்டத்தில் பிரிண்டர் ஐகானில் வலது பக்கம் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் "Printer Assistant" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் "Utilities"என்னும் பிரிவிற்குச் செல்லவும். இதில் "Printer Maintenance" என்னும் பிரிவு இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்தால் அதில் இது போன்ற கேட்ரிட்ஜுக்கான பராமரிப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனைப் பயன்படுத்தி பாதுகாக்கலாம்.

மேற்படி வசதிகள் இல்லை என்றால் கேட் ரிட்ஜினை வெளியே எடுத்து அதன் ஹெட் பகுதியை சிறிது வெது வெதுப்பான நீரைக் கொண்டு சுத்தம் செய்திடவும். அதன் பின் சிறிது நேரம் கழித்து ஹெட்டை ஸிப் போட்ட ஒரு பிளாஸ்டிக் பையினுள் வைத்து மூடி வைக்கவும். ஊரிலிருந்து வந்த பின்னர் அதனை எடுத்து பயன்படுத்தவும். இரண்டு கேட்ரிட்ஜ்களின் விலை பிரிண் டரின் விலையைக் காட்டிலும் அதிகம் என்பதால் இந்த ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக